மக்கள் உரிமை

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இதழான மக்கள் உரிமையில் வெளிவந்த ஆவணங்கள்

வடஇந்திய முஸ்லிம்களின் அவல நிலை

ஆய்வுக்குழு தெரிவிக்கும் அதிர்ச்சிகர முடிவுகள்
வடஇந்தியாவின் ஆறு மாநிலங்களில் (டெல்லி, உ.பி., பீகார், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் ராஜஸ்தான்) முஸ்லிம்களின் நிலை மிகவும் (அனைத்துத் துறை களிலும்) பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. நவீனகால ஊடகங்களுடன் அவர்களுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. அன்றாடச் செய்திகளை அவர்கள் அறிந்து கொள்வது அருகிலுள்ளோரிடம் வெறும் வாய்மொழியாகவே அறிந்து கொள்கிறார்கள். அச்சு ஊடகங்களை விட, காட்சி ஊடகங்களை விட இவர்கள் இம் மாதிரியான தகவல்களே அவர்களைச் சென்றடைகின்றன.

முஸ்லிம்களின் சமூக பொருளாதார கல்வி நிலையை ஆய்வுச் செய்ய நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையிலான பிரதமரின் உயர் மட்டக் குழுவின் ஆரம்பக் கட்ட ஆய்வுகள் இதனைத் தெரிவிக்கின்றன. அரசியல் துறையில் இவர்களின் பங்கெடுப்பு மிகவும் பலவீனமான நிலையில் உள்ளன. ஜனநாயக அமைப்பு முறையில் அவர்களது அரசியல் துறை சார்ந்த முன்னேற்றம் மிகவும் குறைந்த அளவிலே உள்ளதாகவும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கிறது. இவர்களது அரசியல் தலைவர்கள் கூட முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து வெளிச்சப்படுத்தவில்லை. அரசுத்துறை மற்றும் தனியார் துறையிலும் முஸ்லிம்கள் பெற்ற வேலை வாய்ப்பு மிகக்குறைந்த அளவிலே உள்ளன. நிலமற்றவர்களாகவும், கல்வி அறிவு குறைந்தவர்களாகவும் உள்ளனர்.

நகர்ப்புறங்களில் வாழும் முஸ்லிம்களில் 42.9 சதவீதத்தினர் தொலைக் காட்சி வாயிலாக செய்திகளை அறிந்து கொள்கின்றனர். 19 சதவீதத்தினர் ரேடியோ செய்தி களையே கேட்டறிகின்றனர். நகர்ப் புறங்களில் 20.2 சதவீதத்தினர் செய்தித் தாள் படிப்பவர்களாகவும், அதுவே கிராமப்புற முஸ்லிம்களில் வெறும் 9 சதவீதத்தினரே செய்தித் தாள்களைப் படிக்கின்றனர். அரசாங்க வேலைப் பார்ப்பவர்கள் மிகவும் குறைவான அளவிலே உள்ளனர். வெறும் மூன்று சதவீதத்தினரே அரசுத் துறைகளில் உள்ளனர். தனியார் துறையில் 5.3 சதவீதத்தினர் வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். இது நகர்ப்புறத்தில் உள்ள நிலை.

கிராமங்களில் இதைவிட மோசமான நிலையே தொடரும் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. 23.5 சதவீதத்தினர் குடிசைத் தொழில் செய்து வருகின்றனர். 17 சதவீதத்தினர் பகுதி நேர வேலை செய்பவர்களாகவும், 7 சதவீதத்தினர் பெட்டிக்கடை வைத்து பிழைப்பவர்களாகவும் உள்ளனர். கிராமப்புறங்களில் வாழும் முஸ்லிம்களில் 60.2 சதவீதத்தினர் நிலமற்ற ஏழைகள் என்றும், 21 சதவீதத்தினர் மட்டுமே டிராக்டர் உடையவர்களாகவும், வெறும் ஒரு சதவீதத்தினர் பம்ப் செட்களை சொந்தமாக வைத்திருக்கின்றனர் என்பதும் நெஞ்சை அதிர வைக்கும் உண்மையாகும்.

0.3 சதவீத முஸ்லிம்களே கிராமப்புறங்களில் பட்டதாரிகளாக உள்ளனர். நகரங்களில் 40 சதவீதத்தினர் நவீன கல்வி வாய்ப்பைப் பெற்றாலும் 3.1 சதவீதத்தினரே பட்டதாரிகளாகவும் அதிலும் 1.2 சதவீதத்தினரே போஸ்ட் கிராஜுவேட் என்னும் முதுநிலைப் பட்டதாரிகளாய் உள்ளனர்.

இந்நிலையினால் முஸ்லிம்களால் கல்வி நிலையங்களைத் தொடங்கவோ நிர்வகிக்கவோ முடியாத நிலையே நிலவுகிறது. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் கூட குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகளைப் பெறவோ, கல்விக் கட்டணம் செலுத்தி தரமான கல்வி வழங்கும் நிலையோ அவர்களிடம் இல்லை. இந்நிலையே நாடு விடுதலைப் பெற்றதிலிருந்தே இன்றுவரை உள்ள நிலைமையாகும். உண்மையை மூடிமறைக்கும் விதமாக முஸ்லிம்கள் அரசுகளாலும், அரசியல் கட்சிகளாலும் தாஜா செய்யப்படுகின்றனர் என்று மூளையற்ற மூடர்களின் உளறலும் தொடருகிறது. ஆய்வுகளின் முடிவுகளை நீதியரசர் ராஜேந்தர் சச்சார் தலைமையிலான குழு எதிர்வரும் ஜூலை மாதம் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வுகளின் முடிவுகளை நீதியரசர் ராஜேந்தர் சச்சார் தலைமையிலான குழு எதிர்வரும் ஜூலை மாதம் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு