மக்கள் உரிமை

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இதழான மக்கள் உரிமையில் வெளிவந்த ஆவணங்கள்

இதழியல் துறையில் இஸ்ரே­லிய கைக்கூலி­

உலகில் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட ஒரே நாடான இஸ்ரேலை எந்தக் காலத்திலும் அங்கீகரிக்கக்கூடாது என்ற கொள்கையில் தேசத்தந்தை காந்தி உறுதியாக இருந்தார். இதற்காகவே காந்தியைப் படுகொலை செய்த ஆர்எஸ்எஸ் சங்பரிவர் கும்பலும், அவர்களின் ஆதரவாளர்களும் இஸ்ரேலை மிகவும் நேசித்து வருகின்றனர்.

இஸ்ரேலின் பயங்கரவாதச் செயல்களால் பாலஸ்தீன் மற்றும் லெபனான் நாடுகளைச் சேர்ந்த அப்பாவி பொதுமக்களே பலியாகின்றனர். இஸ்ரேலால் கொல்லப்படும் மக்கள் இஸ்லாமிய மக்கள் என்பதற்காகவே மனிதகுல விரோத இந்துத்துவ சேடிஸ்டுகள் முஸ்லிம்கள் படும் கொடுமையால் குளுமை காண்கின்றனர். குழந்தைகள் கொன்று குவிக்கப்படுவதைக் கண்டும் குரூரமாய் சிரிக்கின்றனர்.

இந்துத்துவ சக்திகளுக்கும், இஸ்ரேலுக்கும் காலங்காலமாக கள்ளத் தொடர்பு இருந்து வருகிறது. இஸ்ரேல், உலகம் முழுவதும் தனது கைக்கூலிகளை வைத்துள்ளது. எல்லா நாடுகளிலும் இஸ்ரேலும் அதன் புரவலான அமெரிக்காவும் குறிவைப்பது முதலில் இதழியல் துறையைத்தான். அந்த வகையில் தமிழகத்தில் மொசாட்டின் கைக்கூலி நான்தான் என்று சாட்சி சொல்கின்றன, தலைக்கு வெளியிலும் எதுவுமில்லாத சோவின் மூர்க்கத்தனமான எழுத்துக்கள்.

'சோ'வின் வர்ணாசிரமக் கொள்கையை எதிர்க்கின்ற தமிழ் அமைப்புகள், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிப்பதால், இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைகளை இன்பத்தோடு ரசிப்பவர் தான் இந்த சோ. அந்த நாளிலேயே தமிழர்களை இனப் படுகொலை செய்த இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே பேட்டியைத் தன் இதழில் வெளியிட்டு (கொலைக்கு) நியாயம் கற்பித்த கொடிய ஆசாமி சோ, இப்போது இஸ்ரேலின் இனவெறிப் படுகொலைகளை நியாயப்படுத்தவும், மனிதநேயர்களைக் காயப்படுத்தவும் கட்டுரைகளைத் தீட்டி வருகிறார்.

துக்ளக் 26லி07லி06 மற்றும் 9லி8லி06 தேதியிட்ட இதழ்களின் தலையங்கங்களில் 'சோ' வின் இஸ்ரேல் விசுவாசமும், இஸ்லாமிய துவேஷமும், தேசத்துரேகமும் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளன.26லி07லி06 தேதியிட்ட துக்ளக் இதழில் 'இஸ்ரேலும் இந்தியாவும்' என்று தலைப்பிட்டு தலையங்கம் தீட்டப் பட்டுள்ளது. மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ள இத்தலையங்கத்தில், சம்பவம் நடந்தவுடன் மருத்துவ மனைக்கு உடனே நேரில் சென்று பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் ஆறுதல் சொன்னதையும், அதைத் தொடர்ந்த அரசின் செயல்பாடுகளையும் கேலி செய்துள்ளது துக்ளக் இதழ்.

கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் பச்சைப் படுகொலை செய்யப்பட்டது போல மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்தும் நடந்து விடாமல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தடுத்து விட்டதால் துக்ளக் சோவுக்கு வயிற்றெரிச்சல் தாளவில்லை.
மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்த உடனேயே அரசு முழுவீச்சில் களமிறங்கியது, பயங்கரவாதத்திற்கு நாங்கள் எதிரிகள் என்று நிரூபிக்கும் வகையில் முஸ்லிம்களின் மீட்புப்பணிகள் அமைந்தது. 7 மணி நேரத்தில் மும்பை மாநகரம் எழுந்து நிமிர்ந்தெழுந்து நின்றுவிட்டது. மாபெரும் சேதத்தை எதிர்பார்த்த பயங்கர வாதிகளுக்கும், மதக்கலவரத்தை எதிர்பார்த்த சங்பரிவார், துக்ளக் சோ கும்பலுக்கும் ஒரே நேரத்தில் முகத்தில் கரிபூசினர் இந்திய மக்கள்.

இந்துக்களும், முஸ்லிம்களும் பயங்கரவாதத்திற்கு எதிராகக் கைகோர்த்துக் கொண்ட காட்சியை மும்பை குண்டுவெடிப்புக்குப் பின் காண முடிந்தது. வெட்டிக் கொள்வார்கள் என எதிர்பார்த்தோரின் எண்ணங்களில் இடிகள் விழ இந்துக்களும் முஸ்லிம்களும் ஒட்டிக் கொண்டனர். இதனால் வயிறெரியும் துக்ளக் சோ, இப்படி எழுதுகிறார்:''ஆக, சம்பிரதாயப்படி செய்ய வேண்டிய காரியங்களை செய்து முடித்தாகி விட்டது. இனி தீவிரவாதிகளின் அடுத்த ரத்த வெறியாட்டம் நடக்கிற வரையில் வேறு வேலைகளை கவனிக்கலாம். இடையில் சில அறிவாளிகள் 'ஏன் இந்த மும்பை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது? என்று ஆராய்ந்து பத்திரிகைகளில் கட்டுரை எழுதுவார்கள்.
இந்த அறிவாளிகள் இடதுசாரி சிந்தனை உடைய செக்யூலர் சாரிகளாகத்தான் இருப்பார்கள். இவர்கள் ஆய்வு நடத்தி மும்பை குண்டுவெடிப்புக்குக் காரணம் பாபர் மசூதி இடிப்பே என்று கண்டுபிடிப்பார்கள். பதினைந்து ஆண்டுகளாக நடந்து வருகிற இஸ்லாமிய தீவிரவாதிகளின் கொலைகாரச் செயல்களுக்கெல்லாம் இதுவே பொதுவான காரணம். இன்னும் பதினைந்து ஆண்டுகள் ஆனாலும் இதுவே காரணமாக இருக்கும். இது அவ்வப்போது அறிவாளிகளின் அலசல்களாலும், அரசியல்வாதிகளின் பிரச்சாரங்களினாலும் வலியுறுத்தப்படும். அயோத்தி, இப்படி காலத்தால் அழியாத காரணமாக இருந்து இஸ்லாமிய தீவிரவாதத்தை நியாயப்படுத்தும் என்றால் மொகலாய மன்னர்கள் காலத்திலும், பிரிவினை காலத்திலும் நடந்தேறிய அக்கிரமங்களும் கூட ஹிந்துக்களின் கோபத்திற்குக் காரணமாக இருக்கலாமே!' இப்படி விஷத்தைக் கக்குகிறது சோவின் துக்ளக் ஏடு.

பாபரி மஸ்ஜித் இடிப்பு என்பது நாட்டின் பெருமைக்கு நேர்ந்த களங்கம். அதை அன்று சோவும் கூட கண்டித்தார். உலகில் அதிகமான நபர்களை சாட்சியாக வைத்து நடந்த குற்றம் பாபரி மஸ்ஜித் இடிப்புதான். அன்று அத்வானி பேசிய வெறிப்பேச்சையும், பிரம்மச்சாரிகளான(?) முரளிமனோகர் ஜோஷியும் உமாபாரதியும் கட்டிப்பிடித்துக் கொண்டு ஆடிய ஆட்டத்தையும் நாடு பார்த்தது. ஆயினும் இன்றுவரை அந்தக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுப்பது துக்ளக் சோவுக்கு இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கொலைகாரச் செயலாகத் தெரிகிறது போலும். மொகலாய மன்னர்கள் பல நூறு ஆண்டு காலம் இந்த நாட்டை ஆண்டுள்ளனர். அவர்கள் இந்துக்களை ஒதுக்கியதாகவோ, ஒடுக்கியதாகவோ ஒரு தகவலும் இல்லை. பல கோவில்களுக்கும் மடங்களுக்கும் அவர்கள் மானியம் தந்ததாகவே வரலாறுகள் உள்ளன. ஐம்பதாண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த முகலாய மாமன்னர் அவுரங்கசேப், மீனாட்சியம்மைக்குறம், அபிராமி அந்தாதி உள்ளிட்ட பல இந்து சமய பக்தி நூல்களை எழுதிய குமர குருபரருக்கு காசியில் மடம் அமைத்துக் கொடுத்தவர் என்பது வரலாற்று உண்மை.

ஆயினும் முகலாயர்களுக்கு எதிரான கட்டுக்கதைகளைப் பரப்பிவரும் பணியை ஆரிய கும்பல் அன்றே தொடங்கிவிட்டது என்பதை புகழ்பெற்ற அறிஞரான 'ராகுல் சாங்கிருத்தியாயா' எழுதிய 'வால்கா விலிருந்து கங்கை வரை' என்ற நூலில் பாபா நூர்தீன் என்ற அத்தியாயத்தில் காணலாம். முகலாயர் காலத்திலும், பிரிவினைக் காலத்திலும் சோ கும்பலுக்கு என்ன அக்கிரமம் நடந்து விட்டது என்பதை சோ வெளிப்படையாக எழுதத் தயாரா? இந்தத் தலைப்பில் அவர் பொது விவாதம் செய்ய வருவாரா? இஸ்லாம்தான் சாதிக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மார்க்கம் என்றார் இந்து சமயத் துறவி விவேகானந்தா. இதுதான் சோவின் ரத்தக் கொதிப்புக்குக் காரணம் போலும். துக்ளக் சோவின் குரூர குணம் தலையங்கத்தின் பல்வேறு பகுதிகளில் தெளிவாகத் தெரிகிறது. ''டெலிபோன் பேச்சுகளை ஒட்டுக்கேட்பது, சந்தேகத்தின் பேரிலேயே சிலரை சிறைப்படுத்துவது, தீவிரவாதிகளுக்கு உதவுகிறவர்களைக் கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு உதவுகிற சட்டம் அவசியமான தேவை.'' ''மனித உரிமையாளர்களின் கூச்சல்களைப் பொருட்படுத்தாமல் அறிவாளிகளின் அயோத்தி ஆய்வுகளைப் பற்றிக் கவலைப் படாமல் பத்திரிகை உலகின் பிரச்சாரத்தை நினைத்துத் தயங்காமல் பொடாவை விட உக்கிரம் அதிகமுள்ள சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்.'' ''இஸ்ரேலியன் ஒருவன் பாலஸ்தீனிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டால் பாலஸ்தீனர்கள் பத்து பேரை இஸ்ரேல் தீர்த்துக் கட்டுகிறது. அதனால்தான் இஸ்ரேலையே அழித்து விட நினைக்கிற பகைவர்கள் நாலாபக்கமும் இருந்தும் இஸ்ரேல் இன்னும் தலை தூக்குகிறது. இஸ்ரேல் நம்மில் பத்தில் ஒரு பங்குகூட இல்லை. அவர்களுக்கு இருக்கும் மன உறுதியில் 10ல் ஒரு பங்காவது தோன்றாத வரையில் தீவிரவாதத்தை எதிர்கொள்கிற தகுதி நமக்கு கிட்டாது''

துக்ளக் சோ சொல்ல வரும் கருத்து என்னவெனில், ஒரு இஸ்ரேல் ராணுவ வீரன் கொல்லப்பட்டால் பத்து அப்பாவி பாலஸ்தீனர்கள் கொல்லப்படுவது போல எந்தத் தீவிரவாதி வெடிகுண்டு வைத்தாலும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட வேண்டும், அப்போதுதான் தீவிரவாதம் ஒழியும்(?) என்பது. இதைவிட பயங்கரவாதம் வேறு எதுவாக இருக்க முடியும்? இஸ்ரேலின் மிருக வெறியாட்டத்தைக் கண்டித்துள்ள இந்தியாவை தனது இன உணர்வோடு குறைகூறியுள்ளார் துக்ளக் சோ. 9லி8லி06 தேதியிட்ட துக்ளக் இதழில் ''இஸ்ரேல் செய்வது சரியே'' என்று தலைப்பிட்ட சோவின் தலையங்கம், ஆரிய வெறியின் உச்சத்திற்குச் சென்று இந்தியா இஸ்ரேலுடன் மிக நெருக்கமாக உறவு கொள்ள வேண்டும், இஸ்ரேலின் ஒத்துழைப்பை நாட வேண்டும் என்று உபதேசித்துள்ளது.

லெபனானிலும் பாலஸ்தீனத்திலும் அப்பாவிப் பொதுமக்கள் அராஜகமாகக் கொல்லப்படுகிறார்கள். இந்த மனிதகுல விரோதிகள் மழலைப் பூக்களைக்கூட பொசுக்குகிறார்கள். இதை இந்தியா கண்டிக்கக் கூடாதாம். இஸ்ரேல் செய்வது சரியே என 'மொட்டை' தலையங்கம் தீட்டுகிறார் மொஸாட்டின் கைக்கூலி(!) துக்ளக் சோ. கழிவறைச் சுவர்களில் மனம்போனபடிக் கிறுக்கிப் பழகிய ஒரு சைக்கோவால் மட்டுமே சோவைப் போல எழுத முடியும் என்று நந்தன் பத்திரிகை எழுதியது மிகப்பொருத்தமாகவே இருக்கிறது.

இஸ்ரேலைக் கண்மூடித்தனமாக ஆதரித்து இந்திய அரசின் நிலைப்பாடு களைத் தீவிரமாக எதிர்த்துவரும் சோவின் மீது மத்திய, மாநில உளவுத்துறையினர் ஒரு கண் வைக்க வேண்டும்.

அமைதிப் பூங்காவான தமிழகத்தில் சோவின் எழுத்துக்கள் விரும்பத்தகாத விபரீதங்களுக்கு வித்திடுவது போல அமைந்துள்ளன. அரசுக்கு இதுகுறித்து அதிக எச்சரிக்கை தேவை. சோவின் அத்தனை தொடர்பு களையும் நுணுக்கமாகக் கண்காணிக்க வேண்டும்.கட்டபொம்மன் வாழ்ந்த தமிழ் நாட்டில்தான் எட்டப்பனும் இருந்தான். எழுச்சிமிகு எழுத்துக்களால் பெரியாரும் அண்ணாவும் சமூகப்பணி செய்த தமிழகத்தில்தான் அமெரிக்க அடிவருடிகளும், இஸ்ரேலின் எடுபிடிகளும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு